பார்படாஸ்

விராட் கோலியை தொடர்ந்து ரோகித் சர்மாவும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்று தான் ஓய்வு பெறுவதாக  அறிவித்தார்.  இது கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் அவரது சக விளையாட்டு வீரரான ரோகித் சர்மாவும் தான் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்

நேற்ரு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் நடந்தது. இந்த போட்டியில், இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

பிறகு 177 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களே எடுத்தது. எனவே இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.

வெற்றிக்குப் பின் ரோகித் சர்மா செய்தியாளர்களிடம்,

“இதுவே என்னுடைய இறுதி போட்டி. ஓய்வு பெற இதனை விட மிக சிறந்த தருணம் இல்லை. கோப்பையை வெல்ல வேண்டும் என்று மிக அதிகம் விரும்பினேன். அதனை வார்த்தைகளால் கூறுவது மிக கடினம்”

இதுவே நான் விரும்பியது. அது நடந்து விட்டது. என்னுடைய வாழ்க்கையில் இது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல் இருந்தேன். இந்த முறை அதனை நாங்கள் கடந்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி”

என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை டி20 போட்டிகளில் ரோகித் 159 போட்டிகளில் விளையாடி 4,231 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் 5 சதம் மற்றும் 32 அரை சதங்களும் அடங்கும்.இனி  அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவார்.