சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு  ஆகஸ்டு 12ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 30ந்தேதி முதல்  தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டி,  தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ் படிப்புகளுக்கு 72,743 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த 25-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் 39,853 பேர் இடம்பெற்றுள்ளனர். 7.5% உள் இடஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் 4,062 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 28,279 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று (ஜூலை 30) நேரடியாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, . 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த கலந்தாய்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. அவர்களுக்கான சேர்க்கை ஆணையும் வழங்ககப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,   விளையாட்டு வீரர்களுக்கும், பின்னர் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாராருக்கு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு  http:tnmedicalselection.net என்ற இணையதளத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பதிவு ஆகஸ்டு 4ந்தேதி வரை வழங்கப்பட்டது.  பின்னர் அது 6ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்தநிலையில், தற்போது ஆகஸ்ட் 12ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஆகஸ்டு 12 மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.