தூத்துக்குடி
நேற்றிரவு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது/
தமிழக அரசுக்கு சொந்தமான தூத்துக்குட் அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது திடீரென்று நேற்று நள்ளிரவு ஒன்று மற்றும் இரண்டாவது அலகில் குளிரூட்டும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அந்த அறையில் இருந்த மின் வயர்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன.
தீயணைப்புத் துறையினர் மேலும் தீயை பரவ விடாமல் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகவும், 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.