பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டு பிரபலமானவர் கவுஹர் கான்.

கடந்த சில தினங்களுக்கு முன் கவுஹர் கானுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு அறிவுறுத்தினர்.

ஆனால் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத கவுஹர் கான், படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இதனால் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய அவர் மீது ஓஷிவாரா காவல் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]