சென்னை

திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் நடிகர் அஜீத்குமார் தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு , இந்திரலோகத்தில் நா அழகப்பன், பார்த்திபன் இயக்கத்தில் வித்தகன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் ஆவார்

சமீபத்தில் இவர் செய்தியாளர்களிடம்,

”நடிகர் அஜீத்குமார் தனது பெற்றோரை மலேசியாவிற்கு விடுமுறைக்கு அனுப்ப விரும்பி பல வருடங்களுக்கு முன்பு என்னிடம் கடன் வாங்கினார். அவர் எனக்கு ஒரு படம் செய்வதாகவும், அவருடைய சம்பளத்தில் இந்த தொகையைச் சரிசெய்து கொள்ளலாம் என்றும் என்னிடம் கூறினார்.

ஆனால் இன்றுவரை, அவர் பணத்தைத் திருப்பித் தரவில்லை, படம் செய்தும் கொடுக்கவில்லை. பல வருடங்கள் ஆகியும் அவர் இதைப் பற்றிப் பேசவே இல்லை. அஜித் தன்னை ஜென்டில்மேன் என்று சொல்லிக் கொள்கிறாரஏ தவிவ அவர் அப்படி இல்லை.

எனக்கு அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியை முன்பே தெரியும். அவர் எனது நல்ல தோழி.  அஜித்துக்கு நல்ல குடும்பம் இருக்கிறது, அவர் ஒவ்வொரு படத்திற்கும் 50 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் சம்பாதிக்கிறார்

அப்படி இருக்க.அவர் ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன? மேலும் ஏ.எம்.ரத்னம் போன்ற தயாரிப்பாளர்களும் அஜித் படங்களைத் தயாரிப்பதால் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.  அஜீத்குமார் இதுவரை அவர்களுக்கு உதவவில்லை”

என்று கூறி உள்ளார்.

நடிகர் அஜீத்குமார் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.