பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஐந்து வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பாவ்னி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா , சின்னப்பொண்ணு , சுருதி , மதுமிதா என பிக் பாஸ் வீட்டை விட்டு ஆறு பேர் வெளியேறினர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இன்னும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்க் முடியவில்லை ப்ரோமோவில், இசைவாணியின் கண்ணாடியாக தாமரை, “எனக்கு எதுவுமே புரியலைன்னு சொல்வீங்க. உனக்கு புத்தி சொல்ற அளவுக்கு எனக்கு நிறையவே புத்தி இருக்கு. அவங்க குடுத்து விட்ட கீரை, காய்கறியை சாப்பிட ஆள் இல்ல. அதைத்தான் சொல்ல வந்தேன். அப்போ நீங்க கையெடுத்து கும்பிடவும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. மொகரைய காட்ட மாட்டியா எத்தனை தடவை உன்ன அழகா காட்டிருக்கேன்” என்கிறார். அப்போது இசைவாணியின் கோபத்தை நன்றாகவே அவரது முகம் காட்டிக் கொடுக்கிறது. பின்னர் அனைவரும் அமர்ந்திருக்கும் போது, இசைவாணி ஏதோ சொல்ல, “ஏய் வாய மூடு. நா அந்த புள்ளைய தான் சொன்னேன்” என்கிறார் தாமரை. அப்போது “என்ன நக்கலா பாக்குற? ம்ம்ம்ம்?” எனக் கோபமாகிறார் இசை.

இரண்டாவது ப்ரோமோவில், இசைவாணி – தாமரை பிரச்சனை தொடர்கிறது. அதில் மனசாட்சி படி கூறு நீ நக்கலாக பாட்டு பாடினாயா? அல்லது சந்தோசமாக பாடினாயா? என இசை கேட்கிறார். அதற்கு தாமரை, நான் என் சந்தோஷத்திற்காக பாடினேன், உன்னை பற்றி பேச அதற்குமேல் ஒன்றுமில்லை, இருந்தா தானே பேச என்கிறார். மேலும் மனசாட்சியை கொன்று விட்டு என்னால் வாழ முடியாது என கூறிவிட்டு தாமரை எழுந்து செல்லும் காட்சிகள் உள்ளது.

நிரூப் குறித்து வருண் பேசுவது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், உன் ஆளுமை வந்தபோது நீ கூறியதை நான் உட்பட அனைவரும் கேட்டு நடந்தனர். ஆனால் நீ யார் கூறுவதையும் கேட்பதில்லை, நீ என்ன பெரிய அப்பாடக்காரா? நீ உயரத்தில் பெரியவனாக இருந்தால் பெரிய மாஸா? நீ என்ன வேண்டுமானாலும் செய், நான் உன்னை வச்சு செய்வேன் என வருண், நிரூபிடம் கூறுகிறார்.