சென்னை

சென்னை திருமுல்லைவாயிலில் கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்த தந்தை மற்றும்  மகளின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த சிந்தியா (வயது 35) என்பவர் அவரது தந்தை சாமுவேல் சங்கருடன் (வயது 70 ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்) வசித்து வந்தார். சாமுவேல் சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததால், வீட்டிலேயே வைத்து டயாலிஸில் சிகிச்சையை டாக்டர் எபினேசர் என்பவர் கொடுத்து வந்தார்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் எபினேசரிடம் சிகிச்சை பெற்று வந்த சாமுவேல் வீட்டிலேயே திடீரென உயிரிழந்ததால் அவர் மகள் சிந்தியா, வீட்டுக்கு வந்த எபினேசரிடம் சண்டை போட்டுள்ளார். சிந்திய்வாவை அப்போது எபினேசர் கீழே தள்ளியதில், தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இவ்விருவரின் சடலங்களையும் அப்படியே அறையில் பூட்டி விட்டு, ஏ.சியை ஆன் செய்து டாக்டர் எபினேசர் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

நேற்று அக்கம்பக்கத்தினர் சாமுவேல் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது சங்கர், சிந்தியாவின் சடலங்கள் அழுகிய நிலையில் கிடந்துள்ளன. எனவே சந்தேகத்தின் பேரில் டாக்டர் சாமுவேல் எபினேசரிடம் நடத்திய விசாரணையில் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.