டெல்லி: மத்திய வேளாண்துறையின் உயர்அதிகாரி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, விவசாய சங்கத் தலைவர் ஜெகஜித் சிங் தல்லேவால் மற்றும் உண்ணாவிரதமம் மேற்கொண்டு வந்த 121 விவசாயிகள் தங்களது உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணை செயலாளரின் பேச்சுவார்த்தை மற்றும் உத்தரவாதங்களைத் தொடர்ந்து, விவசாயிகள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.

வேளாண் விளைபொருள்களுக்கு சட்டபூா்வ உத்தரவாதம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண் விளைபொருள்களுக்கு சட்டபூா்வ உத்தரவாதம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, டெல்லி நோக்கி பேரணி செல்ல அனுமதி கேட்டு பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஷம்பு மற்றும் கனெளரி பகுதிகளில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி மறுத்து வருகின்றன.
இந்த நிலையில், விவசாய சங்கத் தலைவர் ஜெகஜித் சிங் தல்லேவால் (வயது 70) கடந்த நவம்பர் 26ம் தேதி பஞ்சாப்-ஹரியாணா பகுதி கனவுரி எல்லை அருகே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இவர், சம்யுக்த கிஸான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது) என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். அவரது உண்ணா விரத போராட்டம் வட மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. அவரது உண்ணாவிரத போராட்டம் 55-ஆவது நாளாக நீடித்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மற்ற விவசாயிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையில், அவர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஆனால், தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். அத்துடன், மருத்துவ சிகிச்சையும் பெற மறுத்து வந்தார்.

இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக 111 விவசாயிகளும் உண்ணாவிரதமத் மேற்கொண்டனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த 18ந்தேதி அன்று மேலும் 10 விவசாயிகள் அவருடன் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினா். இதன் காரணமாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை 121-ஆக அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க கடந்த 18ந்தேதி ( சனிக்கிழமை) வந்த மத்திய அரசு அதிகாரிகள் குழு, பிற விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியது. இச்சந்திப்பு சுமாா் 2 மணிநேரம் நடைபெற்றது. பின்னா், விவசாய அமைப்பின் தலைவா் ககா சிங் கோத்ரா கூறுகையில், ‘மத்திய அரசு தரப்பில் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என்றாா்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தல்லேவால் மருத்துவ உதவி எதையும் ஏற்க மறுத்து வருவதாகவும், அவரது உடல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தெரிவித்ததுடன், 20 கிலோ எடை குறைந்துவிட்டாா்; அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்தனா்.
இதற்கிடையே, மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரியா ரஞ்சன் தலைமையிலான குழுவினர் விவசாய சங்க பிரதிநிதிகளையும், உண்ணாவிரதம் இருக்கும் தல்லேவாலையும் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, பிப்ரவரி 14ம் தேதி சண்டிகரில் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து, தல்லேவால் மருத்துவ சிகிச்சை பெற சம்மதித்தார். அதன்பின்னர் தல்லேவாலுக்கு நரம்பு வழியாக மருந்து செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து தல்லேவாலுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 121 விவசாயிகளும் இன்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர். 121 விவசாயிகளும் பழச்சாறு குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். இருப்பினும், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படும் வரை தல்லேவால் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை கைவிட மாட்டார் என்று விவசாயத் தலைவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.