டெல்லி

பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்தார். தற்போது ரவீந்திர ஜடேஜா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கைக்காக கடந்த 2 ஆம் தேதி நடந்த சிறப்பு முகாமில் பிரதமர் தனது கட்சி உறுப்பினர் பதவியை புதுப்பித்தார். இதே சிறப்பு முகாமில் ரவீந்திர ஜடேஜா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். இந்த தகவலை அவரது மனைவி ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ரிவாபா ஜடேஜா பா.ஜ.க.வில் சேர்ந்துகடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவருக்காக ரவீந்திர ஜடேஜா பிரசாரம் செய்தார்.

தேர்தலில் ரிவாபா தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை விட 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.