மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அவர் தனிமைப்படுக்கொண்டிருப்பபதாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவி வருவதால், தொற்று பாதிப்பும் மீண்டும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தொற்று பாதிப்புக்கு அரசியல் கட்சியினர், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக ஆலியாபட்  கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியாஉள்ளிட்ட பல படங்களில்  வலம் வருகிறார்.தற்போது இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் கங்குபாய் கத்தியாவாடி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார்.

இந்நிலையில், தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக  று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு  சிகிச்சை பெற்று வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.