ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுக்கள் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். இதைத் தொடர்ந்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அங்கு பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு வேட்புமனு தாக்கல் ஜனவரி 10-ந் தேதி தொடங்கி 18-ந்தேதி வரை நடைபெற்றது.
இந்த தொகுதியில் திமுக, நாம் தமிழர் ஆகிய இரு கட்சியின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 65 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 4 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்களும் தாக்கல் செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 19ந்தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மனிஷ், கிழக்கு தொகுதி பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா ஆகியோர் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, நிலையில் வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி இன்று நாளாகும். மாலை 3மணி வரை யாரும் வேட்புமனுவை வாபஸ் பெற்றால், அதை தவிர்த்து, இன்று மாலை 3மணிக்கு மேல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.