சிவகாசி
அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாபா பாண்டியரஜ்ன் இடையே வார்த்தை மோதல் நிகழ்ந்துள்ளது/

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர்போல் செயல்படுவதாகவும் அவரை மீறி யாரும் செயல்[அடாத நிலை உள்ளதாகவும் சமீபத்தில் கூறி உள்ளார்/. இது அதிமுக வினரிடையே கடும் பரபரப்பை ஏற்[அடுத்தியது/
இந்நிலையில் சிவகாசியில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ,
”மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாபா. பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா? பல கட்சிக்கு சென்றுவிட்டு வந்த மாபா. பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகி கன்னத்தில் அறைந்தேன். நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ, பைத்தியக்காரனோ அல்ல. தொலைத்துவிடுவேன். கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாபா. பாண்டியராஜன்.
எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கிறது? அ.தி.மு.க.வில் நான் ஒரு குறுநில மன்னர்தான். எனக்கு பின்னால் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் வாள் ஏந்திய படை வீரர்கள். என்னை பற்றி பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறார் மாபா. பாண்டியராஜன்?
அ.தி.மு.க.விற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது.”
என உரையற்றி உள்ளார்.