சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, 555 ரன்களைக் குவித்துள்ளது.

நேற்று சதமடித்திருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இன்று தொடர்ந்து ஆடி இரட்டை சதமடித்தார். அவர் 218 ரன்கள் எடுத்திருந்தபோது, புதுமுக வீரர் ஷபாஸ் நதீம் பந்தில் அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஓலி போப் 34 ரன்களும், ஜோஸ் பட்லர் 30 ரன்களும் அடித்து அவுட்டாக, டாம் பெஸ் 28 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். ஆர்ச்சர் டக்அவுட் ஆனார்.

இந்தியா தரப்பில், பும்ரா, அஸ்வின், நதீம் மற்றும் இஷாந்த், தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தருக்கு 1 விக்கெட்கூட கிடைக்கவில்லை.