சென்னை: இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்கியுள்ள நிலையில், தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை ஆடிவரும் இங்கிலாந்து அணி, 52 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் பொறுமையாக ஆடிவருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, அந்த அணியின் துவக்க வீரர்களாக ஜோசப் பர்ன்ஸ் மற்றும் டாம் சிப்லி களமிறங்கினர்.

தற்போதைய நிலையில், 52 பந்துகளை சந்தித்துள்ள பர்ன்ஸ் 25 ரன்களும், 76 பந்துகளை சந்தித்துள்ள டாம் சிப்லி 25 ரன்களையும் எடுத்து ஆடி வருகின்றனர். இந்திய பவுலர்களால் இதுவரை விக்கெட் வீழ்த்த இயலவில்லை.

தற்போதுவரை, இஷாந்த், பும்ரா, அஸ்வின் மற்றும் நதீம் ஆகியோர் ஓவர்கள் வீசியுள்ளனர். ஆனால், இன்னும் விக்கெட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.