சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூ பகுதியில் தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமி உடன் திருமணம் ஆனது. இதைத்தொடர்ந்து மேலும் பிரபலமானார் ரவிந்திரன். இவர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் என்ற பெயரில் தமிழ் திரைப்படங்களை  தயாரித்து வருகிறார். சமீபத்தில் இவரது தயாரிப்பில், நடிகர்  கவின் நடித்த லிஃப்ட்  படம் வெளியானது.

இந்த இன்று காலை முதல் ரவிந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு, மோசடி வழக்கில்  கைது செய்யப்பட்ட ரவிந்தர்,   சுமார் ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  சுமார் ஒரு மாத சிறை தண்டனைக்கு பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது.

இந்த நிலையில்,  ரவீந்தரின் வங்கிக் கணக்கில் இருந்து சட்டவிரோத  பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது பற்றி விசாரணை நடைபெற்று வந்தது.  இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் இன்று  சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.