கமதாபாத்

கமதாபாத் ரத யாத்திரையில் பாகன்கள் கட்டுப்ப்பாட்டை மீறிய யானை மக்களிடையே புகுந்துள்ளன.

தற்போது அகமதாபாத்தின் மிக முக்கியமான மத நிகழ்வுகளில் ஒன்றான ரத யாத்திரை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கலந்து கொள்வது வழக்கம். அவ்வகையில், யானைகள் மற்றும் ரதங்கள் உட்பட பொதுமக்கள் கூட்டத்தையும், ஊர்வல பங்கேற்பாளர்களையும், நிர்வகிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இன்றைய ஊர்வலத்தில் 18 யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்ற நிலையில் ஒரு ஆண் யானை திடீரென பதற்றமடைந்து ஓடத் தொடங்கி நியமிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றது.  இதனால் பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடத்தொடங்கினர்.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விலங்கியல் பூங்கா கண்காணிப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து யானைக்கு உடனடியாக மயக்க மருந்து செலுத்தினர். அங்கிருந்த இரண்டு பெண் யானைகள் கூட்டத்திலிருந்து மெதுவாக விரட்டப் பட்டன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை,  கூட்டம், சிறிது நேரத்தில் பதற்றமடைந்தாலும், விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. ஆண் யானை இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.