சென்னை

ன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே ஆன இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன.

இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

 “சென்னை கடற்கரை-விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9:55, 10 :10, 10:40, 11:15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில், சென்னை எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

அதைப்போல் சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 10:30, 11:00, 11:20, 11:40, 11:59, மற்றும் 19-ம் தேதி அதிகாலை 3:55 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில், சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து இன்று இரவு 10:10, 11:00 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில், எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு10:45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

திருமால்பூரில் இருந்து இன்று இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில், எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.”

எனக் கூறப்பட்டுள்ளது.