டெல்லி

டந்து முடிந்த மக்களவை தேர்தலில் 64 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிற நிலையில், தேர்தலுக்கு பின் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. அவை பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என தெரிவிக்கின்றன. பாஜக கூட்டணி 350-க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமார் இன்று மதியம் 12.30 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், எழுந்து நின்று கைதட்டி வாக்காளர்களுக்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம்,

“நடப்பு ஆண்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம். இந்த தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து இருக்கின்றனர்.

தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என ஒன்றரை கோடி பேர் பணியில் ஈடுபட்டனர். பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்று அதனை வெற்றியடைய செய்துள்ளனர். மொத்தம் 64 கோடி பேர் வாக்களித்து உள்ளனர்.

இந்த தேர்தலில், 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட இரண்டரை மடங்கு அதிக வாக்காளர்கள் வாக்கை செலுத்தி உள்ளனர். தேர்தலுக்காக 135 சிறப்பு ரெயில்கள் விடப்பட்டு இருந்தன. 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் தொடர்பாக முதன்முறையாக 100 சுற்றறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறோம்”

என்று தெரிவித்துள்ளார்.