தானே

காராஷ்டிர துணை முதல்வர் எக்நாத் ஷிண்டே மாநிலத்தில் ஏழை மகளிருக்கு உதவித்தொகை அளிக்கும் திட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணியின் அபார வெற்றிக்கு ‘லாட்கி பகின்’ திட்டம் பங்களித்ததாக பரவலாக கூறப்பட்டது.

மகாராஷ்டிர அரசு இந்த திட்டத்தின் கீழ் ஏழைப்பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதி உதவி வழங்கி வருகிறது.  இந்த திட்டம் நிறுத்தப்படும் என ஒரு செய்தி பரவியதால் மகாராஷ்டிர மக்களிடையே கடும் பரபரப்பு உண்டானது.

நேற்று தானே நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

“மகாயுதி அரசு, ‘லாட்கி பகின்’ திட்டத்தை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்காது. அந்த திட்டம் தங்கு தடையின்றி தொடரும். சமூக நலத்திட்டங்களுக்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது.

மக்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டதால் மும்பை, தானே, புனே மற்றும் மராட்டியத்தின் பிற பகுதிகளில் நிலுவையில் உள்ள வீட்டுவசதி திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும்.”

எனத் தெரிவித்துள்ளார்.