சென்னை: தமிழ்நாட்டுக்கு மத்தியஅரசு தர வேண்டிய கல்வி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை விடுவிக்க உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ள நிலையில், அதை அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய தமிழ்நாடு அரசுக்க தர வேண்டிய,  ரூ.2,151 கோடி நிதி, அதற்கு 6% வட்டியுடன் சேர்த்து ரூ.2,291 கோடி வழங்கக் கோரிய வழக்கில்,  மத்திய  கல்வி நிதியை விடுவிக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.

முன்னதாக, மத்திய அரசு ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் (சமக்ர சிக் ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கல்வி நிதி தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதியுள்ளது.ஆனால் தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு இந்த நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் மத்திய அமைச்சரின் அறிவிப்பை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்வி நிதியை வழங்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி,  தமிழ்நாடு அரசு மத்தியஅரசு மீது மே 20ந்தேதி அன்று கல்வி  தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளது. மனுவில், . அதன்படி தமிழ்நாட்டுக்கு நியாயமாக தர வேண்டிய கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என  மனு தாக்கல் செய்துள்ளது.  அந்த மனுவில் தமிழக அரசு கூறியிருப்பதாவது: பி.எம். ஸ்ரீ, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தாததால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல. கல்வி திட்டத்துக்கான நிலுவை நிதி வழங்கப்படவில்லை. தமிழக அரசுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி நிதி இல்லாததால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது. சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் ரூ.2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.

மத்திய அரசுக்கு எதிரான இந்த மனுமீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், மனு இன்றுவரை விசாரணைக்கு பட்டியலிடப்பட வில்லை.  அதனால், தமிழ்நாடு அரசின் கல்வி நிதி தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.