சென்னை:
கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு புகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த புகழ்பெற்ற முருக பக்தரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான கிருபானந்த வாரியார் பிறந்த நாளான ஆகஸ்ட் 25 ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் முதல்வர் அறிவித்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் கடந்த 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி கிருபானந்த வாரியார் பிறந்தார்.

முருகப் பெருமான் மீது அளவற்ற பற்றும், பக்தியும் கொண்டவராக அவர் விளங்கியதால் திருமுருக கிருபானந்த வாரியார் என்று அனைவராலும் அவர் அழைக்கப்பட்டார்.

[youtube-feed feed=1]