தராபாத்

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு நிதி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது நிதி முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்து வ்ழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அமலாக்கத்துறை ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.20 கோடிக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டn  முகமது அசாருதீனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

தற்போது 61 வயதான முகமது அசாருதீன் பெடரல் ஏஜென்சியின் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்கும்படி அந்த சம்மனில் கேட்டு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம் பி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.