சென்னை: திமுகவின் முன்னாள் நிர்வாகியான போதைபொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிப்பின் நட்சத்தி ஒட்டல் உள்பட ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஜாபர் சாதிக் தொடர்பான வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  அதன்படி ஜாபருக்கு சொந்தமான  JSM ரெசிடென்சி ஹோட்டல் மற்றும் ஒரு ஆடம்பரமான பங்களா போன்ற 14 அசையா சொத்துக்கள் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட ஏழு உயர் ரக வாகனங்கள் அடங்கும் என்று ED தெரிவித்துள்ளது.

ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறை யால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டல், ஆடம்பர பங்களா மற்றும் ஜாகுவார், மெர்சிடிஸ் போன்ற 7 உயர் ரக வாகனங்கள் உட்பட ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் முடகப்பட்டுள்ள நட்சத்திர ஓட்டலை  திமுக அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டில்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாள ருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்து டில்லி திஹார் சிறையில் அடைத்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அவரது சகோதரரையும் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அமலாக்கத்துறையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முன்னாள் திமுக செயல்பாட்டாளரும், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவருமான ஜாஃபர் சாதிக் அப்துல் ரஹ்மானிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ED இன் விசாரணை, NCB மற்றும் சுங்க விசாரணைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் 15 இடங்களில் சோதனை நடந்தது. விசாரணையில் ஜாஃபர் சாதிக் தனது சகோதரர் முகமது சலீம் மற்றும் பிறருடன் கூட்டு சேர்ந்து சூடோபெட்ரின் மற்றும் பிற போதைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும் மறைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டது தெரியவந்தது.

அவர் இயக்குனராக/ பங்குதாரராக/ முட்டுக்கட்டையாக இருந்துள்ளார். பல்வேறு நிறுவனங்கள்/நிறுவனங்கள்/நிறுவனங்கள் மற்றும் பிற நபர்கள் மற்றும் உறவினர்கள், இது குற்றத்தின் வருவாயை வழிப்படுத்தவும் அடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த முழு அமைப்பும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் இருந்து சம்பாதித்த குற்றத்தின் வருமானத்தை வழிநடத்த பயன்படுத்தப்பட்டது. எனவே, 26.06.2024 அன்று ஜாஃபர் சாதிக்கையும், 12.08.2024 அன்று முஹம்மது சலீமையும் PMLA, 2002 இன் கீழ் பணமோசடி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

ஜாஃபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் ரியல் எஸ்டேட், திரைப்படத் தயாரிப்பு, விருந்தோம்பல் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு முறையான முயற்சிகளில் முதலீடு செய்து, அவர்களின் போதைப்பொருள் நடவடிக்கைகளில் செய்ததாக தெரியவந்தது.

சாதிக் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளின் நெட்வொர்க் மூலம் இந்த முதலீடுகளுக்கு அனுப்பப்பட்டு, சட்டவிரோத பணம் டெபாசிட் செய்யப்பட்டது. சாதிக், அவரது மனைவி ஆகியோரின் பெயரில் அசையா மற்றும் அசையும் சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்டது. ஸ்ரீ முகமது முஸ்தபா எஸ் மற்றும் ஸ்ரீ ஜமால் முகமது போன்ற பினாமிகள் உட்பட அமீனா பானு, மைதீன் கனி மற்றும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

போதை பொருள் கடத்தலில் கிடைத்த ரூ.21 கோடியில் முக்கிய புள்ளிகளுக்கு பங்கு! ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்…