டெல்லி

மலாக்கத்துறை உதவி இயக்குநர் லஞ்ச வழக்கில் சிபிஐ காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை நகரின் பிரபல பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தி உள்ளனர். அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவ் அப்போத், நகைக்கடை வியாபாரியிடம் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

தான் கேட்ட பணத்தை தரவில்லையென்றால் கைதுசெய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு நகை வியாபாரி சம்மதிக்காததால், ரூ.20 லட்சம் தருமாறு நகைக்கடை வியாபாரியிடம் பேரம் பேசியுள்ளார்.

சந்தீப் சிங் யாதவ் டெல்லியில் ரூ.20 லட்சம் லஞ்ச பணத்தை வாங்கியபோது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிபட்டார். சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.