ஹ்லன்

ன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4.43 மணிக்கு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில்  இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. தலைநகர் டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.