கோவை

ருதமலை கோவிலுக்க் செல்லும் 4 சக்கர் வாகனங்களுக்க் இ பாஸ் தேவை இல்லை என அறிவிக்கபட்டுள்ளது.

கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைப்பகுதியில் உள்ள கோவில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கார்கள் நிறுத்துவதற்கு போதுமான இட வசதி இல்லை என்பதால் மேலே செல்வதற்கு பக்தர்கள் அடிவாரத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவானது.

எனவே கோவில் நிர்வாகம் சார்பில் காலை 6 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 150 கார்களும், மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணிவரை 150 கார்களும் இ-பாஸ் முறையில் அனுமதிக்கலாமா என்று பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 4 சக்கர வாகனங்களுக்கு இ-பாஸ் எடுக்க வேண்டும் என்கிற தகவல் வெளியானதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவில் துணை ஆணையர் செந்தில்குமார்,

”வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்குவது குறித்து பக்தர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்புக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.இதை பொதுமக்கள் தவறாக புரிந்து கொண்டு இ-பாஸ் வாங்க வேண்டும் என்று கருத தேவையில்லை. வழக்கம்போல் வாகனங்களில் தற்போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரலாம்”

எனத் தெரிவித்துள்ளார்.