சென்னை:
மிழக சட்டப்பேரவையின் முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சராக நேற்று மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

நேற்று பதவியேற்றுக்கொண்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ச்சியாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று தமிழக தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டிருந்தார். அதேபோல் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்பொழுது சட்டப்பேரவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

[youtube-feed feed=1]