திருப்பதி

நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துள்ள்னர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று வார நாளாள் என்பதால் இயல்பை விட பக்தா்கள் கூட்டம் சற்று அதிகமாகக் காணப்பட்டது.

எனவே வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிலாதோரணம், புரோகிதர்கள் சங்க கட்டிடம் வரை ரிங்ரோடு தரிசன வரிசையில் காத்திருந்தனர். மேலும் திருமலையில் உள்ள நாராயணகிரி பூங்காவில் உள்ள அனைத்துக் கொட்டகைகளிலும் பக்தர்கள் நிரம்பினர்.

மேலும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் முன்பு கிருஷ்ணதேஜா விடுதி, கோவிலின் நான்கு மாட வீதிகள், லட்டு பிரசாத கேந்திரம், அன்னப்பிரசாத கட்டிடம், பஸ் நிலையங்கள் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  பல்வேறு இடங்களில் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதனால் அலிபிரி டோல்கேட்டில் நீண்ட தூரத்துக்கு பக்தர்களின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாபவினாசனம், ஸ்ரீவாரி பாதம் போன்ற பகுதிகளிலும், அலிபிரி சோதனைச் சாவடியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

நேற்று அதிமாலை 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஏழுமலையான் கோவிலில் 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  நேற்று இலவச தரிசனத்துக்கு 30 மணி நேரம் ஆனதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.