திருப்பதி

திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தல தரிசனத்துக்கு 18 ம்ணி நேரம் காத்திருந்துள்ளனர்

நேற்று காலை நிலவரப்படி  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காம்பளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பி சிலாதோரணம் வரை பக்தர்கள் சுமார் 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுமார் 18 மணி நேரத்துக்கு பிறகு சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

பொதுவாகரூ.300 ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரமும், இலவச சர்வ தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இலவச தரிசனத்தில் வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கவில்லை என்பதால் தேவஸ்தான அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இ தகவல் அறிந்து விரைந்து வந்த கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்யா சவுத்திரி வரிசைகளை ஆய்வு செய்து பக்தர்களிடம் குறைகளை கேட்டு சாப்பாடு, மோர், பால் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். பின்னர் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார்.