திருவனந்தபுரம்

ற்போது கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கபினி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு 2 யானைகள் சிக்கியுள்ளன.

கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் கனமழை பெய்தது. கபினி ஆறு இந்த வனப்பகுதி வழியாக கபினி ஆறு பாய்கிறது.

கனமழை காரணமாக கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு சென்று கொண்டிருந்த ஒரு தாய் யானை மற்றும் ஒரு குட்டி யானை ஆகியவை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன இரண்டு யானைகளும்.  வெள்ளத்தின் வேகத்தால் சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டன.

அப்பகுதி மக்கள், வெள்ளப்பெருக்கு காரணமாக யானைகளுக்கு உதவி செய்ய முடியாத சூழலில் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் இரண்டு யானைகளும் பத்திரமாக மறுகரைக்கு சென்று சேர்ந்தன. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.