குற்றாலம்

குற்றால அருவிகளில் கடும் வெள்ளம் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். அப்போது குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

நேற்று விடுமுறை தினம் என்பதால், குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து அவர்கள் அருவிகளில் நீண்ட வாரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து அருவிகளிலும் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.