காந்திநகர்

குஜராத் மாநிலத்தில் பரவி வரும் சாண்டிபுரா வைரஸால் 50 பேர் பாதிக்கப்பட்டு 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது குஜராத் மாநிலத்தில் புதிதாக சண்டிபுரா வைரஸ் தொற்று பல்வேறு மாவட்டங்களிலும் பரவி வருகிறது. குஜராத் சுகாதார துறை மந்திரி ருஷிகேஷ் பட்டேல்  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

குஷிகேஷ் பட்டேல்”

”சண்டிபுரா வைராசால் ஹிம்மத்பூர் பகுதியில் 14 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களில் 7 பேர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். வைரசின் பாதிப்புக்கு ஆளான 3 பேர் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்”

என கூறியுள்ளார்.

இதுவரை இந்த வைரசா; குஜராத்தில் 50 பேர் வரை பாதிக்கப்பட்டு 16 பேர் உயிரிழந்து உள்ளனர். எனவே ஒவ்வொரு கிராமம் மற்றும் சமூகநல மையங்களுக்கும் இதுபற்றிய தகவல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

குஜராத் முதல்வர் இது குறித்து ஆட்சியர்கள், முதன்மை மாவட்ட சுகாதார அதிகாரி மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி உள்ளார். இதைப் பற்றி அவர் மறுஆய்வு செய்ததுடன், வைரசின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றியும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.