சென்னை
வைகோவின் முன்னாள் உதவியாளர் அருணகிரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அருணகிரி 60 நீண்ட காலமாக வைகோவின் முதன்மை உதவியாளராக இருந்த நிலையில் தற்போது அந்த பொறுப்பில் இல்லை. அருணகிரி வைகோவின் பேச்சுகளைத் தொகுத்து வெளியிட்டு வந்ததுடன் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து பயணக் கட்டுரைகளையும் எழுதி உள்ளார்
இவர் சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்பு நாத்திக பிரசாரத்தை தீவிரமாக செய்து வந்ததால், சங்கரன்கோவில் போலீசில் ராஜா என்பவர், இந்து கடவுள்களை அருணகிரி அவதூறு செய்து பதிவிட்டு வருவதாக புகார் கொடுத்து இந்த புகாரின் அடிப்படையில் அருணகிரியிடம் ஏற்கனவே, போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அருணகிரியை காவல்துறையினர் கைது செய்தனர். அருணகி சமூக வலைதளங்களில் நாத்திக பிரசார கருத்துகளை எழுதியதற்காக அருணகிரி கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினர் காவல்துறையினருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.