சென்னை

சென்னையில் பார்முலா 4 கார் பந்தயப் பகுதி மற்றும் சுற்றுப்புரங்களில் திரியும் நாய்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் தெற்காசியாவிலேயே முதல்முறையாக இரவு நேரத்தில் சாலையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படுகிறது. இதில் நேற்று போட்டியின் பயிற்சி சுற்று நடைபெற்றபோது பந்தய சாலையில் திடீரென நாய் ஒன்று உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக பந்தய சாலையில் இருந்து அந்த நாயை அப்புறப்படுத்தினர்., இன்றைய தினம் கார் பந்தயத்தின் முக்கிய சுற்றான தகுதி சுற்று மற்றும் அடுத்தடுத்த சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

எனவே கார் பந்தயத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், பந்தயம் நடைபெறக் கூடிய சாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.