சென்னை
தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்க திமுகவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் – மே மாதங்களில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 13 மாதங்களில் தேர்தல் வர உள்ளதால் அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராகிவருகின்றன.
கடந்த முறை அ.தி.மு.க. தொடர் வெற்றியை (2011, 2016-ம் ஆண்டுகளில்) பெற்றதுபோல், இந்த முறை நாம் பெற்றுவிட வேண்டும் என்று தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யும் புதிதாக அரசியல் அவதாரம் எடுத்திருப்பதால், இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, விஜய், சீமான் என 5 முனைப் போட்டி நிலவ வாய்ப்பு இருக்கிறது.
நேற்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்த்தில்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் அப்படி ஏதாவது பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், கட்சி தலைமையில் இருந்து கருத்து தெரிவிக்கப்படும். ‘விஜய் பற்றிய விமர்சனங்கள் கூடாது’
என உத்தரவு இடப்படதாக கூறப்படுகிறது..
அரசியல் விமர்சகர் ஒருவர் இதுகுறித்து,,
“பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் அளித்ததால்தான் இன்றைக்கு அவர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுவிட்டார். அதேபோன்ற நிலையை விஜய்க்கும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால் தி.மு.க. தலைமை இந்த முடிவை எடுத்திருக்கலாம்”எ
ன்று கருத்து தெரிவித்துள்ளார்.