சென்னை:
நீட் தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் காங்கிரஸ். கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன. இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அனிதா மறைவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். நீட்டிற்கு எதிராக வரும் 8-ம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள். அதன் பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யபப்படும்’’ என்றார்.
Patrikai.com official YouTube Channel