சென்னை; போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் துரோகம் இழைக்கிறது என சிஐடியு  தலைவர் சவுந்தராஜன் நேரடியாக குற்றம் சாட்டி  உள்ளார்.

தமிழக அரசின் அரசு போக்​கு​வரத்​துக் கழகத்​தில் பணி​யாற்​றும் தொழிலா​ளர்​கள் தங்​களின் நியாய​மான கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி​யும் ஓய்​வு​பெற்ற தொழிலா​ளர்​களின் பணபலன்​களை வழங்க கோரி​யும் கடந்த 30 நாட்​களாக தமிழகத்​தின் அனைத்து பணிமனை​கள் முன்​பும் காத்​திருப்பு போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.  தமிழ்நாடு அரசு பிற துறை​களுக்கு நிதி ஒதுக்​கு​வது​போல் போக்​கு​வரத்து துறைக்​கும் அரசு நிதி ஒதுக்​க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை அதிகாரிகள் சந்தித்து பேச நிலையில்,  நேற்று (செப்டம்பர் 19) மாநிலம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொது மக்​களுக்கு எவ்​வித இடையூறும் ஏற்​ப​டாத வண்​ணம் போராட்டம் நடைபெற்றது. இதில், வரும் காலம் பண்​டிகை காலம் என்​பதை மனதில் கொண்டு தமிழக அரசு மற்​றும் போக்​கு​வரத்து கழகம் சுமுக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில்,  விருதுநகரில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்திய   சிஐடியு தலைவர் சவுந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அரசு போக்குவரத்து  தொழிலா​ளர்​களுக்கு கொடுக்​கவேண்​டிய பணத்தை 9 ஆண்​டு​களுக்​குப் பின்​னரும் கொடுக்க மனமில்​லாமல் இருப்​பது நியாயமற்​றது. ஓய்​வு​பெற்ற தொழிலா​ளர்​களுக்கு 9 ஆண்​டு​களாக பஞ்​சப்​படி வழங்​கப்​பட​வில்​லை. ஓய்​வு​பெற்ற போக்​கு​வரத்து தொழிலா​ளர்​கள் வெறும் கையுடன் வீட்​டுக்கு அனுப்​பப்​படு​கின்​றனர்.

கடந்த ஆட்​சி​யில் தொடங்​கிய அவலம் திமுக  ஆட்​சி​யிலும் தொடர்​கிறது. தொழிலா​ளர்​களுக்கு தரவேண்​டிய ரூ.500 கோடியை தர முடி​யாது திமுக அரசு அதிகாரிகள்  கூறி​விட்​டார்​கள். இதனால்​தான் போக்​கு​வரத்து தொழிலா​ளர்​கள் ஒப்​பந்​தத்​தில் சிஐடியு கையெழுத்​திட​வில்லை.  

அதி​கப்​படி​யான ஒப்​பந்த தொழிலா​ளர்​கள், எலெக்ட்​ரிக் பேருந்​துகள் மற்​றும் பணிமனை​களில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இது திமுக அரசின்எ தனி​யார்​மய​மாக்​கும் முடிவாகும்.  . தனி​யார்​மய​மாதல் காரண​மாக பொதுத்​துறை நிறு​வனங்​களில் இடஒதுக்​கீடு இல்​லாமல் சமூக நீதி அழிக்​கப்​படு​கிறது.

தொழிலாளர்கள் விஷயத்தில்,  திமுக மற்​றும் கருணாநி​தி​யின் கொள்​கைகள் காற்​றில் பறக்​க​விடப்​பட்​டுள்​ளன. அரசுப் போக்​கு​வரத்து தொழிலா​ளர்​களின் பிரச்​சினைக்கு தீர்​வு​காண​வில்லை என்​றால் அடுத்​த கட்​டத்​துக்கு போராட்​டத்தை கொண்​டு​செல்​வோம். மக்​கள் பிரச்​சினை​களுக்​காக திமுக அரசை எதிர்த்து கடுமை​யாக போராடு​வோம்.

இவ்​வாறு அவர் கூறி​னார்.

முன்னதாக  தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு அக்கறை செலுத்தாவிட்டால் போராடுவதை தவிர வழியில்லை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சண்முகம் கூறியுளளார்.

 மாநில அரசின் உரிமை​களை பாது​காக்க நடத்​தப்​படும் போராட்​டம் வெல்ல வேண்​டும் என்​ப​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி உடன்​பட்டு நிற்​கிறது. அந்த போராட்​டம் வெல்​வதற்​கான முழு ஆதர​வை​யும் கட்சி வழங்​கும். அதே​நேரத்​தில் தமிழக அரசு, தமிழக தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​று​வ​தில் உரிய அக்​கறை செலுத்​த​வில்லை என்​றால் அதை எதிர்த்து போராடு​வதை தவிர, அரசின் தொழிலா​ளர் விரோத அணுகு​முறையை கண்​டிப்​பதை தவிர வேறு​வழி​யில்​லை.

மாநில அரசின் உரிமைக்​கான போராட்​டம் வெற்​றியடைய வேண்​டியது எவ்​வளவு முக்​கியமோ, அதே​போல் தொழிலா​ளர்​களின் நியாய​மான கோரிக்​கைகளும் வெற்​றி​பெற வேண்​டியது முக்​கி​யம். தமிழகத்​தில் போக்​கு​வரத்து தொழிலா​ளர்​கள் 30 நாட்​களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வரு​கின்​றனர்.

தூய்மை பணி​யாளர்​கள் போராட்​டம் நடத்​தி​ய​போது உயர் நீதி​மன்​றத்தை பயன்​படுத்​தி, அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர். தாம்​பரத்​தில் ஒப்​பந்த தொழிலா​ளி​யாக பணி​யாற்றி வரும் ஆயிரக்​கணக்​கான வெளி​மாநிலத்​தவர்​கள் தங்​கும் வசதி​யின்றி தவித்து வருகின்றனர்.

எந்​த​வித அடிப்​படை வசதி​களும் இல்​லாமல் கொடுமை​யான சுரண்​டல் ஒப்​பந்த முறை தமிழகத்​தில் நடந்து கொண்​டிருக்​கிறது. இதைப்​பற்றி மாநில அரசு கவலைப்பட வேண்​டும். தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகள் மீது தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி தீர்வு காண வேண்​டும். அதை​விடுத்து பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்கே அதிக காலம் எடுத்​துக்​கொண்​டால் அது நியாய​மான அணுகு​முறை​யாக இருக்​காது. அதை ஆட்​சி​யாளர்​கள் சிந்​திக்க வேண்​டும்.

இவ்​வாறு கூறினார்.