சென்னை: திமுக இருப்பது சிறுபான்மை மக்களுக்காகதான் என முன்னாள் அமைச்சர் ரகுமான்கான்  நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்  பேசியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை  அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில்  முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, ரகுமான்கான் எழுதிய  5 நூல்களை வெளியிட்டார். நியாயங்களின் பயணம், மௌனமாய் உறங்கும் பனித்துளிகள், உலகமறியா தாஜ்மஹால்கள், பூ பூக்கும் இலையுதிர் காலம், வானம் பார்க்காத நட்சத்திரங்கள் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; ரகுமான்கான் எழுத்துக்கும் பேச்சுக்கும் ரசிகன் நான்; அவர் ஒரு நட்சத்திரப் பேச்சாளர்.நியாயங்களின் பயணம், மௌனமாய் உறங்கும் பனித்துளிகள், உலகமறியா தாஜ்மஹால்கள், பூ பூக்கும் இலையுதிர் காலம், வானம் பார்க்காத நட்சத்திரங்கள் ஆகிய நூல்களை வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; ரகுமான்கான் எழுத்துக்கும் பேச்சுக்கும் ரசிகன் நான்; அவர் ஒரு நட்சத்திரப் பேச்சாளர்.

தொகுதி மக்கள் மத்தியில் ரகுமான் கானுக்கு மிகுந்த அன்பு உள்ளது என்றவர்,   ஒரு திறமைசாலியை கண்டு கொண்டால் அவர்களை அரவணைக்கும் பழக்கம் கலைஞரிடம் இருந்தது அதனால்தான்,  கலைஞரின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக  ரகுமான் கான் அமரவைக்கப்பட்டார்.   ரகுமான் கானை அ.தி.மு.க.வுக்கு வரச்சொல்லி எம்.ஜி.ஆர். அழைத்தபோதும் அவர் செல்லவில்லை என்றவர்,   ரகுமான் கான் மீது வெடிகுண்டு வீசப்பட்ட போதிலும் அவர் அஞ்சவில்லை என்று கூறியதுடன், கழக மாநாடுகளில் ரகுமான் கான் பேச எழுந்தாலே கூட்டம் ஆர்ப்பரித்து விடும் என்று புகழாரம் சூட்டிய முதல்வர்,  என்னுடைய உடல்நிலை குறித்து அக்கறையுடன் நலம் விசாரித்தார் ரகுமான் கான். இன்றைக்கும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ரகுமான் கான் என்றபார்.

ரகுமான் பேசக்கூடிய கூட்டங்களில் நான் விரும்பி பங்கேற்பது உண்டு. அவரது பேச்சு தமிழ்நாடு முழுவதும் இடிமுழக்கமாகவும், வெடி முழக்கமாகவும் எதிரொலிக்கும்.  கலைஞரின் அன்பையும், மக்களின் நம்பிக்கையும் பெற்றவர் ரகுமான் கான். அதிமுகவுக்கு இரட்டை நிலைப்பாடு என்பது சாதாரணம் தான். நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்தும் வகையில் அமித் ஷா நேற்று மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

30 நாள் சிறையில் இருந்தால் முதல்வர், அமைச்சர்கள் பதவியை நீக்கும் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவே கருப்புச் சட்டத்தை கொண்டு வந்தனர்.

இதற்கு முன்பு சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தனர். சிறுபான்மையினருக்கு எதிரான சட்டத்தை எதிர்த்தது போல் நேற்று தாக்கல் செய்த நட்கள் சட்டத்தையும் எதிர்ப்போம். திமுக இருப்பது உங்களுக்காகத்தான்; சிறுபான்மை மக்களுக்காக திமுக என்றும் நிற்கும் என்று கூறினார்.