புதுடெல்லி:
தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது.

மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்-ஐ திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு அளித்தார்.
மேலும், கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற ஆளுநர் தவறுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு கூட்டத்தொடரில், நீட் மசோதாவை கிடப்பில் போட்டுள்ள ஆளுநரின் நடவடிக்கை, பி.எஃப் வட்டி குறைப்பு ஆகியவற்றை விவாதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்-ஐ திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel