சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகள் எவை என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது.
அதுபோல ஜவாஹிருல்லா தலைமையிலான மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகள் விவரமும் வெளியாகி உள்ளது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,
சூலூர்
பெருந்துறை
திருச்செங்கோடு
ஆகிய தொகுதிகளில்.போட்டியிடுகிறது. அதிமுகவின் கோட்டையான இதில், அதிமுக நேரடியாக களமிறங்குகிறது. அதை எதிர்த்துகொங்குநாடு கட்சி போட்டியிடுகிறது.
மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகள்
பாபநாசம்
மணப்பாறை
இந்த தொகுதிகளிலும், அதிமுகவை நேரடியாக எதிர்த்து களமிறங்குகறிது.