சென்னை

ர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் மேகதாது அணையால் தமிழகத்துகே அதிக பயன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சேத்துப்பட்டில்  உள்ளஇயற்கை  எரிவாயு உற்பத்தி மையத்தை இன்று பார்வையிட்டு, செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

மேலும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்த டிகே சிவக்குமர். பெங்களூருவில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக சென்னையில் ஆய்வு செய்துள்ளார்.

பிறகு டிகே சிவக்குமார் செய்தியாளர்களிடம்,

“மேகதாது அணை தமிழ்நாட்டுக்காக தான். மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிக பயன்பெறுவது தமிழ்நாடு தான். தற்போது போதிய அளவு மழை பெய்துள்ளதால் மேகதாது அணை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார்.”

என்று தெரிவித்துள்ளார்.