திருநெல்வேலி

திருநெல்வேலி வழியாக செல்லும் அந்த்யோதயா ரயில் வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“சென்னை ரயில்வே கோட்டத்தில் தாம்பரம் பணிமனையில் பொறியியல் மற்றும் சிக்னல் மேம்படுத்தும் பணிகள் நடக்க உள்ளதால் செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 31-ந்தேதி வரை சென்னைக்கு இயக்கப்படும் ரயில்களில் சில முழுமையாக ரத்து செய்யப்பட்டும், பல ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டும், பல ரெயில்கள் தாமதமாக புறப்படும்

அதன்படி தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் இரவு 11 மணிக்கு இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 31-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

தினமும் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து தாம்பரம் செல்லும் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று, 24, 26, 27, 29, 31 ஆகிய தேதிகளில் விழுப்புரம் முதல் தாம்பரம் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு 9 மணிக்கு செங்கோட்டைக்கு புறப்படும் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் 24, 25, 28, 30 ஆகிய தேதிகளில் தாம்பரத்திற்கு பதிலாக விழுப்புரத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு செங்கோட்டைக்கு புறப்படும்.

அதேபோல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் இரவு 7.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 24, 28, 29, 31 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை), 25, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்திற்கு பதிலாக சென்னை எழும்பூருக்கு சென்றடையும்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.