சென்னை

மிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 1.37 கோடி செலவில் புதுப்பிக்க்ப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்துள்ளார்.

மெரினா நீச்சல் குளம் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. 3.5 முதல் 5 அடி வரை ஆழம் கொண்டுள்ள இந்த நீச்சல் குளத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டு இருந்த நிலையில், நீச்சல் குளத்தை முறையாக பராமரிக்காமல் சுகாதாரமற்று உள்ளதாக புகார் எழுந்தன. எனவே மெரினா நீச்சல் குளம் கடந்த ஆண்டு மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

ரூ.1.37 கோடி செலவில் புதுப்பொலிவோடு மறுசீரமைக்கப்பட்ட மெரினா நீச்சல் குளம் நேற்று மாலை மீண்டும் திறக்கப்பட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திறந்து வைத்தார். மெரினா நீச்சல் குளத்தை நாளை முத்ல் மக்கள் பயன்படுத்த வசதியாக காலை 5:30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நீச்சல் குளம் திறந்திருக்கும்.

குளத்தில் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சி சார்பில் தரப்பட்டுள்ள கியூ.ஆர் கோடை பயன்படுத்து பணம் செலுத்தினால் 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும். அதன்படி அவர்கள் கட்டணமாக ரூ.40 செலுத்தினால் போதும்.

நீச்சல் குளத்தின் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. மேலும் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ. 30 ரூபாய் கட்டணமும் அவர்களும் கியூ.ஆர் கோடை பயன்படுத்தி கட்டணம் செலுத்தினால் ரூ. 25 வசூலிக்கப்பட உள்ளது..