பெங்களூரு

ர்நாடகா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.i

இதுவரை கர்நாடகாவில் 93 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டு சோதனை நடத்தப்பட்டதில் பெங்களூருவில் மட்டும் 310 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதும், பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் 467 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. ஏற்கனவே பெங்களூருவில் 80 வயது மூதாட்டி உள்பட 2 பேர் டெங்கு பாதிப்பால் பலியாகி இருந்தனர்.

நேற்று கக்கதாசபுராவை சேர்ந்த 27 வயது வாலிபர் டெங்கு காய்ச்சல் பாதித்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 1,742 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருந்தது ஏற்கனவே 8 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியான நிலையில் நேற்று ஒருவர் இறந்ததாக் டெங்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

நாஅளுக்கு நாள் கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் இதனை தடுக்க சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆயினும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.