டெல்லி
டெல்லியின் புதிய முதல்வரை முடிவு செய்வதில் தாமதம் தொடர்கிறது/

கடந்த 5 ஆம் தேதி நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.. தேர்தலின்போது பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்று குறிப்பிடப்படவில்லைஎன்றாலும் டெல்லி பொதுமக்கள் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.
எனவே டெல்லியின் புதிய முதல்-மந்திரி யார்? என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. முதல்வ்ராக முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜின் பெயர் ஏற்கனவே அடிபட்டு வந்தாலும் அவர் தற்போது மக்களவை உறுப்பினராக இருக்கிறார். மேலு, கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிரிதி இரானி பெயரும் பேசப்படுகிறது.
புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மாவின் பெயரும் பேசப்படுகிறது. மேலும் டெல்லி பா.ஜனதா தலைவர் வீரேந்திர சத்சேபா மற்றும் மகளிர் அணி நிர்வாகி ரேகா குப்தா ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன. தவிர டெல்லி எம்.பி.யாக இருக்கும் மனோஜ் திவாரியின் பெயரையும் பரிசீலிக்கிறார்கள்.
டெல்லி முதல்வராக வர இவர்களில் யாராவது ஒருவருக்குதான் வாய்ப்பு உள்ளது/. இறுதி முடிவு எடுப்பது பிரதமர் மோடியாகத்தான் இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன., இன்று முதல்வர் யார்? என்பதை முடிவு செய்ய கட்சியின் சட்டமனறக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு ஆனால், இந்தக் கூட்டம் நாளைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் புதிய முதல்-மந்திரி யார்? என முடிவு செய்யப்பட்டு 20-ந்தேதி பதவி ஏற்பு விழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.