சென்னை:

மிழக சட்டமன்றத்தின் மானிய கோரிக்கைக் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சபை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் கூடியது.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர்ந்த கடந்த மாதம் பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்ற பின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு மார்ச் 8 முதல் ஏப்ரல் 9 வரை நடத்தச் சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் கூட்டம் முடிவு செய்து, அதன் படி கடந்த 8 ஆம் தேதி சபை கூடியது. அன்றைய தினம், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உள்பட 4 மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சபை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் கூடியது.

சட்டப்பேரவையில் இன்று  வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. அதனையடுத்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் மானிய கோரிக்கை தாக்கலும், விவாதத்தின் பின்னர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கே.சி.கருப்பணன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]