விழுப்புரம்

விக்கிரன்வாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா,  பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில்  சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விக்கிரவாண்டியில் ஜுலை 10 அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், ஜூலை 8 முதல் 10 ஆம் தேதி வரையிலும், அதேபோல வாக்கு எண்ணிகை நடைபெறும் ஜூலை 13 ம் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 4 நாட்கள் மூட விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.