தென்காசி

இன்று மாலை 6 ம்ணி முதல் தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

.

தென்காசி மாவட்டத்தில்\ பூலித்தேவன் பிறந்தநாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியையொட்டி தென்காசி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும் ஆகஸ்ட் 30ம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு அறிவிப்பின் படி 4 பேருக்கு மேல் நின்று கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.