சென்னை: சமூக வலைதளங்களில் நீதிபதிகள் மீது விமர்சனம்  வைக்கப்படுகிறது.  அதை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும் மாதம்பட்டி ரங்கராஜ், அவரது காதலி கிறிசில்டா தொடர்பான வழக்கை விசாரித்தபோது,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தவெக கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியானது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமாரின் உத்தரவு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இவரது குடும்ப விழாவில் முதல்வர் கலந்துகொண்டுள்ளதை சுட்டிக்காட்டி, நீதிபதி ஒரு தரப்புக்கு ஆதரவானவர் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இடந்த நிலையில், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, தன்மீது  சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் விமர்சனங்கள் குறித்து  கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள விடியோக்களை நீக்கக்கோரியும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிறிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஜாய் கிரிடில்டாவின் பேட்டி காரணமாக தனது இரண்டு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவுக்கு அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

 இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி செந்தில்குமார், ”சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைப்பதில்லை. உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக நீதிபதிகளையும் விமர்சிக்கின்றனர். தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களை குறிப்பிட்டும் முந்தைய கால நிகழ்வுகளை குறிப்பிட்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.