சென்னை: தாம்பரம் அருகே இரும்புலியூரில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களின் சேவை தாமதமாகி உள்ளது.

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் அருகே உள்ள இரும்புலியுர் பகுதியில், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்தது, இன்று அதிகாலை கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அதிகாலை 4.45 மணி அளவில் விரிசலை கண்டுபிடித்த ரெயில்வே ஊழியர்கள், அதை சரி செய்யும் நடவடிக்கையும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையொட்டு, தென்மாவட்டம் உள்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டன.

பின்னர் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரி செய்யப்பட்டதுடன், காலை 6 மணி முதல் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், சென்னைக்கு வரும் தென்மாவட்ட ரயில்களின் சில மணி நேரங்கள் தாமதமாக வந்துகொண்டிருக்கின்றன.